பெரிய பண்ணை, சின்னப் பண்ணை நடுப்பண்ணை என... அடுக்கிக்கொண்டே போகலாம். ஒன்றுபட்ட தஞ்சை மண்ணின் வரைபடத்தை தீர்மானித்தவர்கள் ஒட்டுமொத்த நிலங்களையும் வளங்களையும் மட்டுமல்ல... மனிதர்களையும் சொந்தமாக்கியவர்கள் உழைப்பை சுரண்டி ஏழைகளை ஒட்டாண்டியாக்கியவர்கள் ஒடுக்கப்பட்டவனை சாதியால் ஒதுக்கி வைத்தவர்கள்... கேட்க நாதியற்று கிடந்தவனுக்கு தண்டனையாக காதில் கேட்டாலே நேரில் கண்டாலே மனித சமூகம் முகம் சுளிக்கும் ஈனச் செயலாக... சாணி கரைசலைவாயில் ஊற்றுவதும் கட்டி வைத்து சவுக்கால் அடிப்பதும் சாதி திமிரின் உச்சம்.. கூலி கேட்டதின் உச்சம் 44 கண்மணிகளை கொளுத்தியது ஆதிக்க திமிர்... கொடுமைகளை சகிக்க முடியாதவர்களாய்.. எதிர்கொண்டு பேச முடியாதவர்களாய்.. எதிர் கொண்டு தாக்க முடியாதவர்களாய்... கூனி குறுகி கும்பிடு போட்டவர்களாய் இடுப்பில் வேட்டியும், தோளில் துண்டும் போட முடியாதவர்களாய்... நாதியற்றவர்களாய் கிடந்த வாழ்விழந்த உழைப்பாளி மக்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் “அடித்தால் திருப்பி அடி” என்கிற ஆயுதமேந்தி... நம்பிக்கை நட்சத்திரமாய் ஒற்றை ராணுவமாய்.. ஓங்கி அடித்தால் ஓராயிரம் டன் வெயிட்டாக உழைப்பாளி மக்களின் உந்து சக்தியாக தஞ்சை தரணியின் முகவரி பி.சீனிவாசராவ். ஆண்டைகளுக்கும் பண்ணைகளுக்கும் ஜமீன்களுக்கும், ஆதீனங்களுக்கும் எதிராக அவர் பற்றவைத்த “தீ” கிராமபுற உழைப்பாளிகளின் விடுதலையை பெற்றுகொடுத்த “தீ”. இந்த தீயின் வெளிச்சத்தில் ஆயிரம் ஆயிரமாய் . . . நம்பிக்கையாய்... தலைவர்கள் மட்டுமல்ல தியாகிகளாய் உதித்தார்கள். ஒன்றுபட்ட தஞ்சையின் வரைபடத்தை தனதாக்கி கொண்ட வீணர்களை விரட்டியடித்து அதே மண்ணில் மணலி கந்தசாமி துவங்கி விசம் வைத்துகொல்லப்பட்ட களப்பால் குப்பு நாணலூர் நடேசன் துப்பாக்கி தோட்டாக்களுக்கு நெஞ்சை காட்டிய... இரணியன், சிவராமன், ஆறுமுகம்.. சிக்கல் பக்கிரி, கோட்டூர் ராசு தஞ்சை என்.வெங்கடாசலம் பி.எஸ்.தனுஷ்கோடி, அமிர்தலிங்கம், பட்டுராசு, வெங்கடேசன் பாரதிமோகன், கோ.வீரையன். ஏ.எம்.கோபு, காத்தமுத்து, செல்லமுத்து, நாவலன் என... எண்ணற்ற... இளம் தலைவர்களாய் தஞ்சை வரைபடத்தின் முகதோற்றத்தை மாற்றி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை பெற்று கொடுத்த மறைக்க மறுக்க முடியாத வரலாற்று நாயகர்களாய்.. உருவானார்கள்.. இவர்களின் களமும், தியாகமும் இளம் தலைமுறைக்கு உரமூட்டும், வலுவேற்றும் தஞ்சை மண்ணின் மிச்ச சொச்சங்களின் சாதிப் கொடுமைகளை தீயிட சீனிவாசராவ் மூட்டிய “தீ” யை உயர்த்திர் பிடிக்க தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தஞ்சை மாநாடு வழிகாட்டும் பி.கந்தசாமி திருவாரூர் (மாநிலக்குழு த.தீ.ஒ முன்னணி)பெரிய பண்ணை, சின்னப் பண்ணை நடுப்பண்ணை என... அடுக்கிக்கொண்டே போகலாம். ஒன்றுபட்ட தஞ்சை மண்ணின் வரைபடத்தை தீர்மானித்தவர்கள் ஒட்டுமொத்த நிலங்களையும் வளங்களையும் மட்டுமல்ல... மனிதர்களையும் சொந்தமாக்கியவர்கள் உழைப்பை சுரண்டி ஏழைகளை ஒட்டாண்டியாக்கியவர்கள் ஒடுக்கப்பட்டவனை சாதியால் ஒதுக்கி வைத்தவர்கள்... கேட்க நாதியற்று கிடந்தவனுக்கு தண்டனையாக காதில் கேட்டாலே நேரில் கண்டாலே மனித சமூகம் முகம் சுளிக்கும் ஈனச் செயலாக... சாணி கரைசலைவாயில் ஊற்றுவதும் கட்டி வைத்து சவுக்கால் அடிப்பதும் சாதி திமிரின் உச்சம்.. கூலி கேட்டதின் உச்சம் 44 கண்மணிகளை கொளுத்தியது ஆதிக்க திமிர்... கொடுமைகளை சகிக்க முடியாதவர்களாய்.. எதிர்கொண்டு பேச முடியாதவர்களாய்.. எதிர் கொண்டு தாக்க முடியாதவர்களாய்... கூனி குறுகி கும்பிடு போட்டவர்களாய் இடுப்பில் வேட்டியும், தோளில் துண்டும் போட முடியாதவர்களாய்... நாதியற்றவர்களாய் கிடந்த வாழ்விழந்த உழைப்பாளி மக்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் “அடித்தால் திருப்பி அடி” என்கிற ஆயுதமேந்தி... நம்பிக்கை நட்சத்திரமாய் ஒற்றை ராணுவமாய்.. ஓங்கி அடித்தால் ஓராயிரம் டன் வெயிட்டாக உழைப்பாளி மக்களின் உந்து சக்தியாக தஞ்சை தரணியின் முகவரி பி.சீனிவாசராவ். ஆண்டைகளுக்கும் பண்ணைகளுக்கும் ஜமீன்களுக்கும், ஆதீனங்களுக்கும் எதிராக அவர் பற்றவைத்த “தீ” கிராமபுற உழைப்பாளிகளின் விடுதலையை பெற்றுகொடுத்த “தீ”. இந்த தீயின் வெளிச்சத்தில் ஆயிரம் ஆயிரமாய் . . . நம்பிக்கையாய்... தலைவர்கள் மட்டுமல்ல தியாகிகளாய் உதித்தார்கள். ஒன்றுபட்ட தஞ்சையின் வரைபடத்தை தனதாக்கி கொண்ட வீணர்களை விரட்டியடித்து அதே மண்ணில் மணலி கந்தசாமி துவங்கி விசம் வைத்துகொல்லப்பட்ட களப்பால் குப்பு நாணலூர் நடேசன் துப்பாக்கி தோட்டாக்களுக்கு நெஞ்சை காட்டிய... இரணியன், சிவராமன், ஆறுமுகம்.. சிக்கல் பக்கிரி, கோட்டூர் ராசு தஞ்சை என்.வெங்கடாசலம் பி.எஸ்.தனுஷ்கோடி, அமிர்தலிங்கம், பட்டுராசு, வெங்கடேசன் பாரதிமோகன், கோ.வீரையன். ஏ.எம்.கோபு, காத்தமுத்து, செல்லமுத்து, நாவலன் என... எண்ணற்ற... இளம் தலைவர்களாய் தஞ்சை வரைபடத்தின் முகதோற்றத்தை மாற்றி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை பெற்று கொடுத்த மறைக்க மறுக்க முடியாத வரலாற்று நாயகர்களாய்.. உருவானார்கள்.. இவர்களின் களமும், தியாகமும் இளம் தலைமுறைக்கு உரமூட்டும், வலுவேற்றும் தஞ்சை மண்ணின் மிச்ச சொச்சங்களின் சாதிப் கொடுமைகளை தீயிட சீனிவாசராவ் மூட்டிய “தீ” யை உயர்த்திர் பிடிக்க தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தஞ்சை மாநாடு வழிகாட்டும்
பி.கந்தசாமி திருவாரூர் (மாநிலக்குழு த.தீ.ஒ முன்னணி)